Tuesday, June 21, 2016
ஜென் துறவி
ஒரு கிராமத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த ஒரு பிரச்சனையையும் எளிதில் தீர்த்துவிடும் தன்மை உடையவர்.
ஆகவே அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவரிடம் சென்று, தங்கள் பிரச்சனையை சொல்லி சரிசெய்து கொள்வர்.
அத்தகைய கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை அருகில் உள்ள சந்தைக்கு சென்று வாங்குவது வழக்கம். சந்தை என்றாலே சற்று தூரமாக, சிறு சிறு தெருக்களை தாண்டி தான் செல்ல வேண்டியிருக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு நாள் "சந்தை நாள்" என்ற ஒன்று இருக்கும். இந்த நாளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும். அவ்வாறு ஒரு சந்தை நாளன்று மக்கள் அந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்த நாள் மிகவும் கூட்டமாக இருந்தது. அந்த கூட்டம் சிறு தெருக்கள் வரை நின்றிருந்தது. அதிலும் மக்கள் அந்த சந்தைக்கு செல்லும் போது எப்போதும் ஒரே தெருவில் தான் செல்வார்கள். அந்த நாளன்று அந்த தெருவின் முனையில் ஒரு முரட்டுக்குதிரை இருந்தது. மக்கள் சந்தைக்கு செல்ல வேண்டுமென்றால், அந்த குதிரையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.
அந்த குதிரையின் பக்கத்தில் சென்றால், குதிரையின் முரட்டுத்தனத்தை பார்த்து, அப்படியே அந்த இடத்தில் நின்று மக்கள் எவ்வாறு அந்த குதிரையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்த ஜென் துறவியும் அந்த சந்தைக்குச் செல்வதற்கு வந்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த மக்கள், அந்த துறவியிடம் தங்கள் பிரச்சனையை சொன்னார்கள்.
அந்த துறவி "அப்படியா?" என்று சொன்ன படியே, வந்த வழியாக திரும்பி சென்று, மற்றொரு தெருவின் வழியாக சந்தைக்கு சென்றார்.
ரத்தம்
சதாசிவம் அண்மையில் MD பொறுப்பை ஏற்றவன்.
சதாசிவம் கவனிக்கும் நிறுவனத்தில் கடைநிலை ஊழியன் மணி.
மணி 50 வயதை நெருங்கும் ஒரு தொழிலாளி சதாசிவத்தின் அப்பா காலம் தொட்டு பணிபுரிவதால் சீனியர் என்ற அந்தஸ்தை தவிர வேறொன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அங்கிகாரம் இல்லை அவனுக்கு.
சலவை செய்யப்படாத துணியும்,
எண்ணெய் தேயத்தே பல நாட்களான தலைமுடியுமாய் காட்சியளிப்பான்.
"ஐயதானே சொல்றாரு பரவாயில்ல" மனதிற்குள் நினைத்துக்கொள்வான் மணி.பெரும்பாலும் சதாசிவத்தின் கண்களில் படாமலேயே ஒதுங்கி வேலைபார்ப்பான்.தற்செயலாக பார்த்துவிட்டால் வசைமொழிதான்.
சதாசிவத்திற்கு பிடிக்காததினால் மற்ற யாவரும் கூட அவனை வெறுத்தே பழக்கப்பட்டுவிட்டனர்.
"எந்த இடம் சீக்கிரம் சொல்லுங்க" கண்களில் நீர் மல்க போனை வைத்தாள்.சதாசிவத்திற்கு ஆக்ஸிடென்ட் காரில் செல்லும் போது எதிரே வந்த லாரியால்.
"ஒண்ணு வேணா ட்ரை பண்ணலாம் ஆனா அதுவும் கொஞ்ச கஷ்டம்தான்,ஏன்னா அவர் குருப் ரத்தம் கிடைப்பது ரொம்ப அரிது, நீங்க வேணும்னா ட்ரை பண்ணிபாருங்க யாராவது அவர் குருப் ரத்தம் உள்ள ஆள் இருந்தா ரத்த தானம் பண்ண சொல்லுங்க,
பிழைக்க வழியிருக்கான்னு பார்ப்போம்" டாக்டர் உறுதியாய் கூறி முடித்தார்.
டாக்டர் செல்போனில் பேசியவுடன் இன்னும் கலங்கிப்போனாள் சதாசிவத்தின் மனைவி.
கடைநிலை ஊழியனானாலும் பொருந்தித்தான் போனது அவன் ரத்தமும் ஒரு பணக்காரனின் ரத்தத்தோடு.
கோபம்
வாழ்க்கை
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.
10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொறுத்தது.
90% நாம் எப்படி
எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது. 😀
என்று தணியும் இந்த தாகம்
அன்று கிளைக் கட்டிடத் திறப்பு விழா நடந்துக்கொண்டிருந்தது.
மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்கள்,ஆளுங்கட்சி பிரமுகர்,
சினிமா நடிகர் என மேடையே களை கட்டிருந்தது.மருத்துவமனையின் பணியாளர்கள் அத்தனை பேரும் பார்வையாளர்களாய் அங்கு அமர்ந்திருந்தனர்.
இது எலும்பு முறிவு வார்டில் இருந்த நோயாளியின் சத்தம் .
"ஏன்யா கத்துற இங்க ஒருத்தரும் இல்ல எல்லாரும் மீட்டிங் பாக்க போயிருக்காங்க"
என்று பக்கத்துக்கு பெட்டில் இருந்த நோயாளி கூறினான் ..
அந்த வார்டில் இருந்த எல்லோருமே கை கால் முறிந்து நடமுடியாதவர்களாய் இருந்தனர்.
என்று கத்திக் கொண்டே ஒருக்களித்து திரும்பினான் . அப்படி புரண்டு படுத்துக் கொடுத்தது அவனுக்கு வேதனையாக இருந்தது போலும் வலியில் முகம் சுளித்தான்.
"என்னையா கூச்சல் போடறீங்க? நர்சம்மா திட்டுவாங்க" என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்தான் வார்ட் பாய் ..
இதற்கிடையில் அந்த அரசியல்வாதி பேசுவது ஒலிப்பெருக்கி வழியாக கேட்டது.
"இந்த மருத்துவமனை நம் நாட்டுக்கு குறிப்பாக இந்த ஊருக்கு மகத்தான சேவை செய்கிறது என்பதில் சந்தேகமே இல்லை "
எனக் கூற பார்வையாளராய் இருந்த நர்ஸ் , வார்டு பாய் மருத்துவர்கள் என அனைவரும் கரகோஷம் எழுப்பினர். .
"தாகம் " அரற்றினான். அந்த தாப ஜுரக்காரன்.
"எப்படிங்க பொருக்குறது என்னால முடியலையே." என அவன் நெளிந்தான்.
ஒலிபெருக்கியில் சத்தம் அதிகமாய் கேட்டது.
என அந்த நடிகர் சொல்ல கரகோஷம் அந்த கட்டிடத்தையே கிடுகிடுக்க செய்தது.
Late
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்.
அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்”
என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது. பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோஅவர்கள் முகமே அதில் தெரிந்தது.
உன் வாழ்வை மாற்ற முடியும்.
பாஸிட்டிவ் திங்கிங்(Positive Thinking)
கூட்டத்தை விலகி கொண்டு உள்ளே நுழைந்தான்,